Tuesday, February 15, 2011

என் உறவே நீ எங்கே ? சொல் மனமே சொல்..

என் உறவே நீ எங்கே????
பாவை உன்னை பார்த்த பின்னே பார்வையையே நான் இழந்தேன்!
பாவமென தெரிந்த பின்னும் பாவி உன்னை நினைத்து விட்டேன்!!
பாதையிலே போகயிலே பாதி உயிர் நான் இழந்தேன்!!!
மீதி உயிர் போகும் முன்னே மீண்டும் நீ வந்துவிடு!!!!
சொல் மனமே சொல்...
என் கனவுகளை கல்லரையாக்கி
என் நினைவுகளை நித்திரையாக்கி
என் சிந்தனையை சில்லரையாக்கி
உந்தன் காலடியை நான் வணங்கும் சந்தானமாய் நீ இருக்க
கருவரையில் உருவான என்னை கல்லரையில் சிறை வைப்பாயா ??
இல்லை மனவரையில் மாலையிடுவாயா?
சொல் மனமே சொல்....

Monday, February 14, 2011

வாழ ஆசைப்படுகிறேன்

என் நெஞ்சத்தில் குடியிருக்கும் உடன்பிரவா சகோதரர்கள் எத்தனை எத்தனை. எல்லோரும் நீ புரிந்து கொண்டவர்களா! நான் யார் என்ற முகவரி உங்களுக்கு தெரியுமா, உன்மையாக உங்கள் நெஞ்சங்ளில் நிறைந்தவன் என்றால்.
அதற்கான சான்று உங்கள் சமுதாயம் சார்ந்தவன் என்று எண்ணுகீர்ளா. அல்லது நட்பிற்கு நல்லவன் என்று எண்ணுகீர்களா! உங்களைத்தான் கேட்கிறேன் நட்பிற்கு அவசியம் என்ன வேண்டுமோ அவை என்னிடம் இருக்கின்றது உங்களுக்கு நட்பு அவசிம் என்றால் என்னுடன் பழகலாம் இல்லையெனில் உங்கள் சிந்தனையை நோக்கி நீங்கள்.,.,.
நான் ஏழை தான் ஆனால் கோழை அல்ல எனது தன் மானத்தை இழப்பதற்கு.
நானும் எங்கள் ஊரில் என் குடும்பத்துடன் செழிப்பான ஆழமரமாய் வாழ ஆசைப்படுகிறேன். அதை தடுக்க நினைப்பவர்க்ள் என் ஊரில் சிலர் அந்த சிலருக்கு முகம் முடிய ஆதரவாளர்கள் பலர் விரிவான முறையில் என் வாழ்கை.

தேசம் விட்டு தேசம் வந்த ஒருவனின் துடிப்பு,,,,,,,,,

அம்மா உந்தன் அன்பின் முகம் காண நான் வருவது எப்போ? நமது வீட்டில் வறுமை எனும் வார்த்தை ஒளிந்தற்க்கு பின்னால் தான், உன் துயரம் என்னும் எடையை சுமர்ந்த நான்! காரணம் எனது தாயே நீ என்னை பத்து மாதம் சுமர்ந்து என்னைப் பெற்றெடுத்தாய் உனக்கு மாராக நான் என்ன செய்தேன். சின்ன உதவி நம் குடும்பம், கடலில் தத்தளித்த படகாய் இருக்கின்றது அதை மீட்கப் படாத பாடு படுகிறேன்.
ஆசையாக இருக்கு அம்மா உந்தன் அன்பு முகம் காண. ஆனால் ஆசை பாரு உந்தன் அருகில் நான். இல்லை பல காலம் உன்னை பத்திரமாய் பார்த்துக்கொள்ள ஆசை. ஆனால் அருகாமையில் நான் இல்லை அது தான். என் திசை துபாய் பகலும் இரவிலும் உன் நினைப்பு என்னை துன்புறுத்தியது தாயே! ஒரு நாளும் உன்னை மறவாமல் உன் நினைப்பு வருகிறது. என் அம்மா உன் கவலைப் போக்க கால மெல்லாம் நான் இருக்கேன் என் தாயே கலங்காதே!!!!
துபாயில் நான் தங்கத்தை வாங்க நினைத்தேன். என் தங்கத்தாயே நீ இருக்க நமக்கு எதற்கு தங்கம் என்று தண்ணீராய் செலவழித்தேன் நான் உழைத்த பணம் காசு போக போகம் புரிந்தது புன்னியவான் என் தகப்பா உன் புரியாத்தனம் தானே உன் பிள்ளை துபாயில் வாடுகிறேன் நான்..
காலம் கூடும் நேரத்தில் கழுத்தருத்தாய் என் தகப்பா காரணம் உன் நினைப்பு கழங்க விட்டாய் எங்களை நீ நீங்காத துயரம் நீ பிரிந்த சென்றதாலே. பிரிந்தது உன் பிரிவை யாரலும் தடுக்க முடியவில்லையே தங்கைகள் இருவரும் தரணியில் இருக்க தம்பி ஒருவன் ரவுடியாய் மார அக்கா ஒருத்தி அடிமைய்யாய் இருக்க என் அன்புத்தாயின் மனம் என்னவாகுமோ என்பதை நினைத்து நினைத்து என் மனம் புன்னாய் மாறியது என் அன்புத்தாயே! நீ கலங்காதே, உன் விழியில் வழியும் நீரைக்கழுவ நான் இருக்கேன். கழங்காதே! என் தெய்வமே!!
உன்னை நினைத்து நான் எழுதும் தாயே! எனது மனம் உன் நினைவிலே! உன்னை போல் ஒரு தாய் கிடைப்பது அரிது-- எனக்கு கிடைத்தென்றால் அது என் வாழ்வின் பரிசு....... பிரியமுடன் செல்வம்

Thursday, February 10, 2011

மனம் கண்ட வலி ( Part 2 )

அம்மாவுக்கு புற்றுநோய் இருக்குப்பா. ஆப்ரேஷன் பன்னனும் அதர்க்கு ஒருலட்சம் தேவைப்படும் என்று டாக்டர் சொன்னார்....


எப்போ பணம் கொடுக்கிறாயோ அப்பொ ஆப்ரேஷன் பண்ணலாம், என்று டாக்டர் சொன்னவுடன் தன்னேயே இலப்பதர்க்கு முடிவேடுத்தான். அம்மாவிடம் போனான் விஷால் அம்மா என்று அழுதான். ஏன் அழுதுகொண்டிருக்கிறாய், டாக்டர் இந்தமாதிரி சொன்னார்ம்மா. எனக்கு உன்னை விட்டால் இந்த உலகத்தில் யாரும்மா தெறியும் அழுதான். எவ்வளவு செலவாகும் என்று அம்மா கேட்டால் தம்பி நான் உனக்காக 1.50.000 லட்சம் ரூ செத்துவச்சுருக்கேன். அது நீ M.A. படிப்பத்ற்க்காக உடனே பார்த்தான். விஷால் அம்மா எனக்கு படிப்பு முக்கியம் இல்லை, நீங்கள் தான் முக்கியம் உடனே மருத்துவமனைக்கு பணம் கட்டுனான். ஆப்ரேஷம் நல்ல படியாக முடிந்தது..


படிப்பதற்க்கு பணம் இல்லை இனி என்ன பண்ணுவது வேளை தேடி அளைய்ந்தான். கிடைக்கவில்லை தெருவில் நடந்து வந்த போது விஷால் நண்பர் ஒருவனை சந்தித்தான். டே எங்கேடா 2 3 வருஷமா ஆளை கானம் என்று விஷால் கேட்க டே நான் வெளிநாடு போய்ருந்தேன் டா அப்பிடியா சம்பளம் எல்லாம் எப்படி டா நல்ல சம்பளம் டா அப்படியா சந்தோஷம் டா டே எனக்கு ஏதாவது வேளை இருந்தால் சொல்லுடா அப்படியா டே நான் விஷா கொண்டு வந்துருக்கேன் அனான் என கம்பெனி இல்லை வெற கம்பெனிடா ஒகே டா நான் வற்றேன் டா ஒகே சந்தோஷத்தில் வீட்டுக்கு வந்தான் அம்மா நான் வெளிநாடு போகபோறேன் அம்மா என்ன சொல்லுராய் சந்தோஷம்ப்பா, சில நாட்கள் பிறகு வெளிநாடு சென்றான்............


சில நாட்களுக்கு பிறகு பட்டுகோட்டையில், பஸ்சில் கண்டக்டர் டிக்கேட் டிக்கேட் என்று வரும் போது, தேவிகாவிடம் டிக்கேட் என்று கேட்டார், உடனே பர்ஸை திறந்து எடுத்தாள். தேவிகா கண்டக்டர் பர்ஸை பார்த்தார்.. அழகா இருக்கே பர்ஸ் என்று நினைத்துவிட்டு. போய்விட்டார் மறுநாள். காலை கண்டக்டர் டிக்கேட் என்றவுடன். பர்ஸைய் திறந்தாள் தேவிகா.. மறுபடியும் கண்டக்டர் பர்ஸ் நல்லா இருக்கே என்றார். இது யார்யுடையது என்னுடையது என்றால். எனக்கு கொடும்மா நான் பணம் தருகிறேன் என்றார். இந்த பர்ஸும் என் உயிர் ஒன்றுதான். அப்படியா இல்லை என் நண்பன் பர்ஸ் மாதிரி இருந்தது அதான் கேட்டேன். உங்கள் நண்பன் பெயர் என்ன.........
விஷால் என்றான் உடனே தேவிகா இரங்க வேண்டிய ஸ்டாப் வந்தது. உடனே இறங்கினால் அழுதுகிட்டே சென்றாள். மறுநாள் காலையில் தேவிகா பஸ்க்காக காத்துகொண்டிருந்தால். பஸ்சும் வந்தது கண்டக்டர் இருந்தார் அண்ணா உங்கள் நண்பன் பெயர் விஷாலா ஆமாம். அண்ணா உங்களுக்கு எப்படி தெறியும். நான் விஷால் ஒரே காலேஜ் மெட் அப்படியா இப்போ அவர் எங்கே இருக்கார் இராமநாதபுரத்தில். அப்படியா அண்ணா என்னை அவர் இருக்கும் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போங்க அண்ணா.. ஒகேம்மா நான் ஒரு நாள் உன்னை கூப்பிட்டு போறேன் என்று சொன்னார்,,,,,,,,,,,
இரண்டுநாட்கள் பிறகு கூப்பிட்டுச் சென்றார் அங்கே விஷால் அம்மா மட்டும்தான் இருந்தாங்கள் வாப்பா கல்யாண் எப்படிப்பா இருக்க நல்லா இருக்கியா ? நல்லா இருக்கேன் அம்மா ஆம இந்த பொன்னு யாருப்பா அம்மா இந்த பொண் பஸ்ஸில் பழக்கம் விஷாளுடைய பர்ஸ் வச்சுருந்தால் யார் பர்ஸ் என்று கேட்டேன் விஷாளுடைய பர்ஸுனு சொன்னாங்க விஷாலை நான் பார்க்கனும் என்று சொன்னாங்க அம்மா உன் பெயர் என்னம்மா என் பெயர் தேவிகா நான் விஷாலை பார்க்கணும் இரண்டுநாட்களுக்கு முன் தான் வெளிநாடு போனான் போன் நம்பர் இருக்கா.. இல்லை அவன் இன்னும் போய் போன் பன்னல போன் பன்னுனா சொல்லுறேன் உன் போன் நம்பர்குடுத்துட்டு போம்மா நான் தருகிறேன்
ஒரு சின்ன துண்கு தால் எடுத்து எழுத துவங்கினால்.....பாட்டி பாட்டி என்று ஒரு குறல்.
யாரு பாட்டி என்னப்பா பேராண்டி பாட்டி மாமா வெளிநாட்டுல இருந்து போன் பண்ணியிருக்காக வாங்க பாட்டி.. வாமா அவனே போன் பன்னிருக்கான் பேசுவோம் ஹலோ என்னப்பா நல்லா இருக்கியா ஒரே கண்ணிர் மழை தம்பி உன்னை பார்க்க ஒரு பொண்ணு வந்துருக்குப்பா குடுங்க ஹலோ என்றவுடன் கட்டானது போன் புது துபாய் நண்பர் கொடுத்த போன் கார்டுல இருந்த திர்ஹாம்ஸ் காலியானது மனக்கவலையோடு நண்பரிடம் பேசிவிட்டேன் என்றான் விஷால்....
நண்பன் கேட்டான் உன் அம்மா அப்பா நலமா என்றான். அதற்கு விஷால் அம்மா நலம் அப்பா என்றதும் கண் கலங்கியது. ஏன் என்னடா என்றான் நண்பன் அப்பா இறந்துவிட்டார் என்று முடித்துக் கொண்டான் ஆனாலும் அந்தபொண் யார் என்று இவன் மனது தினமும் வருடியது. இவனுக்குள் தேவிகாவா இருப்பாலோ அவள் எப்படி இங்கே இல்லை இல்லை வேறுயாராக இருக்குக் கூடும். என்று தினமும் இரவு வாட்டியது அந்தப்பொண் நினைவு....
தேவிகா ஆண்ட்டி நான் போய் வருகிறேன் என்று சொல்லி புறப்பட்டாள் தேவிகா அபள் வீட்டிற்க்கு வந்தாள் தனது பெட்ரூமில் விஷாலை எப்படியெல்லாம் நேசித்தேன் அவர் ஏன் போனை கட்பன்னுனார் இவ்வளவு நாள் பார்க்கவில்லையே! பேசவில்லையே என்ற கோபமா காரணம் தெறியாமல் இரவு முழுக்க விழித்துக் கொண்டே இருந்தாள். விஷால் காலையில் அலராம் வைய்த்து கொண்டு தூங்குவதும் 4 மணிக்கு எழுந்து குளித்து விட்டு சூ பேண்ட் சர்ட் இன்னிங்செய்து கொண்டு கிளம்புவான் 4.45க்கு புறப்படும் கம்பெனி பஸ் மாலை 6 மணியளவில் ரூமிற்க்கு வந்து குளித்துவிட்டு தானே சமையல் செய்தும் செய்ய தெரியாமலும் சாப்பிடுவான் இவன் தூங்கும் போது 10 மணி ஆகிவிடும் பின்பு இரவு முழுக்க அம்மாவும் தேவிகாவும் நண்பர்களும் இரவில் விஷால் தூக்கத்தை கலைப்பார்கள்......
தேவிகா எப்பொதும் போல் பட்டுக்கோட்டை பஸ்சில் ஏறினாள் என்னம்ம தேவிகா எப்படி இருக்காய். நான் நல்லா இருக்கேன் அண்ணா நீங்கள் எப்படி இருக்கிங்க நல்லா இருக்கேன் அண்ணா.. தேவிகா உன்னிடம் ஏதோ சொல்ல நீனைத்தேன் மறந்தே போச்சு ம் என் நண்பன் துபாயில இருந்து போன் செய்தான் ஸாரி ஸாரி உன் வருங்கால சிரிப்பு ஹா ஹா ம் உடனே ஸ்டாப் வந்துவிட்டது தேவிகா இறங்கினாள் நாளைக்கு கண்டிப்பா சொல்லுங்கள் என்று டாடா பாய் பாய் என்று கிளம்பினாள் தேவிகா இப்படியே 3 மாதம் கழிந்தது....
விஷால் தன் அம்மாவிற்கு செல்போன் தைலம் மருந்து பொருட்கள் டார்ச்லட் இப்படி பல பொருட்கள் எல்லாம் அனுப்பி வைத்தான் அம்மாவும் பெற்றுக்கொண்டால். அம்மாவிற்கு போன் செய்தான் அம்மா நல்லா இருக்கிறிங்களா ஆம் நான் நலம் நீ எப்படிப்பா இருக்கிற என்றவுடன் நாண் நன்றாக இருக்கிறேன் நல்லமுறையில் உடம்பை கவனிக்கவும் சரிப்பா நீ நல்லா சாப்பிடு உடம்பை கெடுத்துடாதே செளியில் அங்கே இங்கே எல்லாம் போகாதே.. என்னப்பா சரிம்மா வேற உங்களிடம் ஒரு பொண் வந்து. என்னைக் கேட்டதே யாரும்மா அந்த பொண்ணு அப்பப்பா இன்னும்மா ஞாபகம் வச்சிருக்க அந்த பொண்ணுயாருனு தெரியலப்பா ஏதோ தேவிகாவாம் உன்னோட படித்த பொண்னாம் சரிம்மா சரிம்மா வேற என்னம்ம சொன்னா.. போன் நம்பர் கொடுத்தாப்பா குளிக்கும் போது சேலையில் இருந்ததால நனைந்து கிளிந்து விட்டதுப்பா என்னம்மா நீங்க கவனமா இருக்கிறது இல்லையா, சரி அம்மா இன்னொரு நாளைக்கு போன் பன்றேம்மா என்று சொல்லி போனை வைத்துவிட்டான் அம்மா ஏன் இவன் இப்படி பதட்டப்படுகிறான் என்று தெறியாமல் விழித்தாள்................
மீண்டும் கல்யானை சந்தித்தாள் தேவிகா ஆம் எனக்கு போன் செய்தான் 3 மாதத்திற்க்கு முன்னாடி ஒரு பெண்னை எங்கள் விட்டுற்கு கூட்டிக் கொண்டுபோனாயே யார் அவள் என்று கேட்டான் உன் தோழி தேவிகா என்றேன் டே என்னடா சொல்றே உன்மைதானா என்று கேட்டான் ஆமாம் என்று சத்தியம் செய்தேன் ஆனால் ஒன்று தேவிகா, அவனுக்கு இவ்வளவு ஆவல் கூடாது அவள் எப்படி இருக்கா நல்லா இருக்காளா சந்தொஷமா பேசினான் என்னை என்ன விசாரித்தாள் என்று என்னை பாடாய்படுத்திவிட்டான் உனக்காக ஒரு நல்லவனைத்தான் தேர்ந்தெடுத்துள்ளாய் என் போன் நம்பரை கொடு என்று இந்த நம்பரைக் கொடுத்தான் இனிமேல் என்னை ஆளவிடுங்கசாமி என்று கல்யான் டிக்கட் எடுக்க ஆரம்பித்தான் அன்று இரவு. விஷால் போன் ஒலித்தது என்ன பாடல் டோன் என்ன என்றால்...
சின்ன வயசுல ஒடிபுடிச்சேன்.
நித்தம் கபடிகள் ஆடி செயிச்சேன்.
கட்டாந்தரையெல்லாம் கண்கள்.
சிமிட்டுதே! பட்ட மரம் கூடபார்த்து.
சிரிக்குதே! பழைய நினைவு தும்புதே!
பாவம் மனசு ஏங்குதே மண்ணு மணக்குதே!
நேஞ்சுவரைக்கும் கண்ணுகலங்குதே!
கள்ளிசிரிபும் கொடுக்கா புளி கொத்து
கொத்தாய் காய்சிருக்க காதுகுத்தி
கறிசமச்ச நாளும் நேனவிருக்கு மீண்டும் இளமை திரும் மாமா.
மிண்டும் உறவு பூக்குமா <<<<<>>>>>>
தொடரும்,,,,,,,,,,,,,,,,,

Tuesday, February 1, 2011

'சித்தம்' - ஒரு உணர்வின் ஓவியம்

நண்பர்கள் சிறு முயற்ச்சியால் உருவான ஒரு குறும்படம்தான் சித்தம்
நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் சொல்லகூடிய வார்த்தை தான் சித்தம்
எல்லாம் ஆண்டவன் சித்தங்க ஆண்டவன் சித்தம் இருந்தா எல்லாம் நடக்கும்.
இப்படி சொல்லகூடிய வார்த்தை தான் சித்தம்...
சித்தம் படத்திற்கான லிங்க் youtube Link:
part-1
Part-2
அனைவரையும் தங்கள் கருத்துக்களை பகிர அழைக்கிறேன்
அன்புடன்
வாசிம்கான் (அஸ்கர்)

Monday, January 24, 2011

மனம் கண்ட வலி (Part 1 )

இராமநாதபுரம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில். தாஸ் மல்லிகா என்ற தம்பதியருக்கு விஷால் என்றொரு மகன் பிறந்தான் செல்வ செழிப்புடன் வாழ்ந்த குடும்பம் என்பதால் விஷால் அவர் வீட்டில் கேட்பது எல்லாம் வாங்கி கொடுத்து செல்லமாக வளர்த்தார்கள். இளைஞன் ஆனபோதும் விஷால் விருப்பம் போல் வாழ்ந்து வந்தான்.



ஒரு நாள் விஷால் பஸ்சில் பயணிக்கும் பொழுது உள்ளே போம்மா உள்ளே போம்மா என்று எல்லோரும் சத்தமாகவும் கோபமாகவும் சொன்னார்கள் அப்பொழுது படியில் நின்ற பெண் உள்ளே போக முடியாமல் திணறினாள் மீண்டும் அவர்கள் இந்த பெண் திமிராக நிற்கிறாள் பார்திர்களா.. என்று உள்ளே தள்ளிவிட்டனர். விழுந்தபெண்னிர்க்கு தலையில் பழமாக அடிபட்டு ரத்தம் கொட்டியது யாரும் அதனைக் கண்டு கொள்ளவில்லை. அருகில் நின்ற விஷால் பார்த்தான் அய்யோ பாவம் அந்தபெண். என்று பஸ்சை நிரறுத்துங்கள் என்று சொல்லி சத்தம் போட்டான். அருகில் இருந்த எல்லோரும் கீழே இறங்குங்கள் என்றதும் அதிக கோபம் கொண்டு அவர்களைய் சீண்டினான். கீழே அந்தபெண்னோடு கையைய் பிடித்து இறங்கினான் விஷால்.



தலையில் இருந்து ரத்தம் அதிகமா கொட்டியது. வா மருத்துவமனைக்கு போவோம் என்று கூப்பிட்டான் என்னால் நடக்க முடியாது. என்று சொன்னாள். ஏன் என்று கேட்டான் கால்களைய் காமித்தாள் ஒரு கால் உனம் என்று தெரியவந்தது விஷாலுக்கு இந்த பெண்ணையா எல்லோரும் திட்டினார்கள் அட பாவேமே சரி பொருங்கள் என்று ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு போணான் டாக்டர் சொன்னார் தலையில் அடிப்பட்டதால் காயம் பலமாக உள்ளது இரண்டு நாட்க்கள் இங்கே ஒய்வு எடுக்க வேண்டும் என்றார் டாக்டர்..



உடனே அந்தப்பெண்னைப் பார்த்தான் பெரியகட்டுடன் முனங்கள் சத்தம் கேட்டது என்ன என்று பார்க்கும் போது அம்மா அண்ணா என்று முனங்கள் சத்ததுடன் இருந்தாள்.


விஷால் காலேஜக்கும் வீட்டிற்க்கும் போகமுடியவில்லையே என்று என்னி இந்தபெண்ணையும் விட்டுபோக மணமில்லாமல் கவலையாய் இருந்தான்.



(அந்த நேரம் கைபெசி கிடையாது)



மறுநாள் கண் விழித்தாள் அவள் அருகிள் இருந்த விஷாலய் பார்த்து மன்னிக்கவும் என்னால் உங்கலுக்கு எவ்வலவு செரமம். இந்த ஊரில் இப்படியும் ஒருத்தரா என்று ஆச்சரியத்துடன் பார்த்தாள் உங்கள் பெயர் என்ன என்று கேட்டால் என் பெயர் விஷால் என்று சொன்னான் விஷாலும் உங்கள் பெயர் என்ன என்று கேட்டான் என் பெயர் தேவிகா என்றும் சொன்னதும் அந்த நிமிடமே இரண்டுபேரும் காதல் சுவாசத்தை ஙகர்ந்தனர் அருகில் இருந்த செவிலியர் தேவிகாவைய் பார்தார் சொந்தகார பெண் அல்லவா நேற்று இரவு தேவிகா வீட்டில் காணம் என்று சொன்னார்கள் அல்லவா உடனே தேவிகா அம்மா அண்ணனிடம் சொல்லிவிட்டார் அந்த செவிலியர்....




உடனே அண்ணன்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வந்தார்கள். உள்ளே பார்த்தார்கள் விஷாலும் தேவிகாவும் மணம் விட்டு பேசிக்கொண்டிருக்கும் போது அண்ணன்கள் பார்த்து விஷாலை யார் நீ என்று கேட்டு அடித்துவிட்டார்கள் அடிக்கும் போது விஷால் பாக்கேட்டிலிருந்த பர்ஸ் தேவிகாவின் பெட்டில் விழுந்தது யாருக்கும் தெரியாமல் உடனே எடுத்துகொண்டாள் தேவிகா. விஷாலை அடித்து உதைத்து போட்டுவிட்டு தேவிகாவை அழைத்து சென்றனர் விஷால் காயங்களுடன் வீட்டுக்கு சென்றான்..




வீட்டில் போய் அம்மா அம்மா என்றான் விஷால் நீ எங்கேடா போன என்று தாய் கேட்க என்னடா காயம் என்று கதறினாள் அம்மா இது ஒன்றும் இல்லையம்மா நான் நல்லா இருக்கேன் என்று சமாதானம் ஆக்கினான். அம்மா எனக்கு பசிக்குது சாப்பாடு போடுங்கள் உடனே சாப்பிட்டு முடித்தவுடன். அம்மா அப்பா எங்கேம்மா என்று கேட்டான் அப்பா உன்னை தேடி போய்ருக்கார் என்று சொல்லியிருக்கும் போது அப்பா வந்துவிட்டார். எங்கேப்பா போன என்று கேட்டார். அதற்கு அப்பா நான் என் நண்பனுக்கு முடியல அதான் என்னால் வரமுடியலப்பா என்று சொல்லி தப்பித்தான்.





தேவிகா வீட்டில் யார் அந்த பையன் என்று கேட்க எனக்கு தெறியாது பஸ்சில் இருந்து மருத்துவமனைக்கு என்னை கொண்டுபொய் சேர்த்தார் அவளவுதான் அவர்கள் வீட்டில் நம்பவில்லை இப்படியே வாழ்க்கைய் ஒடிகொண்டிருக்க தேவிகா மனசு விஷால் எங்கே என்று தேட துவங்கியது கண்ங்கள் கசிந்தன தினமும் விஷாலை தேடி பஸ்சில் பார்த்தார் சில வருடங்களாக கிடைக்கவில்லை.



ஒரு நாள் உள்ள அவள் அலமாரியை தொரந்தாள் பர்ஸைய் தேடினாள் பர்ஸ் கிடைத்தது பர்ஸைய் திறந்து பார்த்தாள் பர்ஸில் எந்தஒரு அடையாளம் இல்லை விஷால் அப்பா அம்மா போட்டோ மட்டும் தான் இருந்தது. ஆனால் பர்ஸ் பழைய மாடலாகவும் யாரும் கண்டிராத ஒரு மாடலாகவும் இருந்தது அதைய் பொக்கிஷமாகவும் பத்திரமாகவும் வைத்திருந்தாள் தேவிகா வீட்டுக்கு ஒரே ஒரு பெண் தான் தேவிகாவுக்கு 6 அண்ணன்கள் நல்ல கோடிஸ்வர குடும்பம் ஒரு நாள் 3 வது அண்ணன் வந்து கேட்டான். யார், யார். அந்த பையன் என்று கேட்டு வற்புர்த்தினான் தேவிகா வீட்டிலும் ரோம்ப சித்திரவதை படுத்தினார்கள் அண்ணன்ங்கள் அவள் சரியாக சாபிடுவதில்லை சரியாக துங்குவதும் இல்லை. ஏன் இவள் இப்படி இருக்கா என்று தேவிகாவின் இரண்டாவது அண்ணன் தேவிகா பெட்ரூம்க்கு போனான்.



அப்போதுதான் அவன் கண்னுக்கு தென்பட்டது அந்த பர்ஸ் உடனே அந்த பர்ஸைய் திறந்து பாத்தவுடன் அதிர்ந்து போனான் உடம்பெல்லாம் வேர்த்தது காரணம் அதில் இருந்த போட்டோவில் தேவிகா அப்பாவை வியாபரம் (தொழில்) விஷயமாக கொலைய் செய்தவர் போட்டோ 19 வருடத்திற்க்கு முன் இரண்டு பேரும் வியாபாரத்தில் தகரார் ஏற்பட்டு தாஸ் குத்திகொண்டு விட்டார் உடனே தாஸைய் போலிஸ் சிறையில் அடைத்தனர்.

பலவருஷமாக கொலைய் செய்வதர்க்கு தேடிக்கொண்டிருந்த தாஸ் கிடைத்தான் என்று போட்டோ மட்டும் எடுத்து விட்டு பர்ஸை பெட்ரூமில் போட்டுவிட்டு கோபத்தில் தேவிகாவின் அண்ணன்ங்கள் தாஸைய் தேடி சென்றனர்..


விஷால் வீட்டில் இரண்டு நாட்களாக அப்பா வீடு வரவில்லை. நீ காலேஜ்க்கு போகவேண்டாம் தேடிபார்க்கலாம் என்று தேட தாயும் மகனும் ஆரம்பித்தனர் அப்பொழுது ஒருவர் வந்து சொல்லுகிறார் தனுஸ்கோடியில் ஒரு பிணம் கிடப்பதாக தெறியவந்தது அங்கு போய் பார்த்தார்கள் தனுஸ்கோடியில் தாஸ் கத்தி குத்தி கொல்லப்பட்டு கிடந்தார் மல்லிகா அழுது கடற்கறை மணலும் நனைய்ந்தது கடலும் நிரம்பியது பிறகு போலிஸ் வந்தார்கள் விசாரணை செய்வோம் யார் செய்தது கூடியசிக்கிரத்தில் கண்டுபிடிப்போம் என்று சொன்னார்கள்..



சில நாட்கள் ஆனவுடன் மல்லிகாவுக்கும் உடல்நலம் சரியில்லாமல் ஆனது விஷால் காலேஜ் போகாமல் அம்மாவைய் கவனித்து கொண்டு இருக்கிறான் ஒரு நாள் அம்மா திடிரென்று வாயில் இருந்து ரத்தம் ரத்தமா வந்தது உடனே மருத்துவமனைக்கு கொண்டுபோனான் விஷால் டாக்டர் என் அம்மாவுக்கு என்ன டாக்டர் என்று கேட்டான் உன் அம்மாவுக்கு புற்றுநோய் இருக்குப்பா ஆப்ரேஷன் பன்னனும் அதர்க்கு ஒருலட்சம் தேவைப்படும் என்று டாக்டர் சொன்னார்.
(தொடரும்)...........................