Monday, January 24, 2011

மனம் கண்ட வலி (Part 1 )

இராமநாதபுரம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில். தாஸ் மல்லிகா என்ற தம்பதியருக்கு விஷால் என்றொரு மகன் பிறந்தான் செல்வ செழிப்புடன் வாழ்ந்த குடும்பம் என்பதால் விஷால் அவர் வீட்டில் கேட்பது எல்லாம் வாங்கி கொடுத்து செல்லமாக வளர்த்தார்கள். இளைஞன் ஆனபோதும் விஷால் விருப்பம் போல் வாழ்ந்து வந்தான்.



ஒரு நாள் விஷால் பஸ்சில் பயணிக்கும் பொழுது உள்ளே போம்மா உள்ளே போம்மா என்று எல்லோரும் சத்தமாகவும் கோபமாகவும் சொன்னார்கள் அப்பொழுது படியில் நின்ற பெண் உள்ளே போக முடியாமல் திணறினாள் மீண்டும் அவர்கள் இந்த பெண் திமிராக நிற்கிறாள் பார்திர்களா.. என்று உள்ளே தள்ளிவிட்டனர். விழுந்தபெண்னிர்க்கு தலையில் பழமாக அடிபட்டு ரத்தம் கொட்டியது யாரும் அதனைக் கண்டு கொள்ளவில்லை. அருகில் நின்ற விஷால் பார்த்தான் அய்யோ பாவம் அந்தபெண். என்று பஸ்சை நிரறுத்துங்கள் என்று சொல்லி சத்தம் போட்டான். அருகில் இருந்த எல்லோரும் கீழே இறங்குங்கள் என்றதும் அதிக கோபம் கொண்டு அவர்களைய் சீண்டினான். கீழே அந்தபெண்னோடு கையைய் பிடித்து இறங்கினான் விஷால்.



தலையில் இருந்து ரத்தம் அதிகமா கொட்டியது. வா மருத்துவமனைக்கு போவோம் என்று கூப்பிட்டான் என்னால் நடக்க முடியாது. என்று சொன்னாள். ஏன் என்று கேட்டான் கால்களைய் காமித்தாள் ஒரு கால் உனம் என்று தெரியவந்தது விஷாலுக்கு இந்த பெண்ணையா எல்லோரும் திட்டினார்கள் அட பாவேமே சரி பொருங்கள் என்று ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு போணான் டாக்டர் சொன்னார் தலையில் அடிப்பட்டதால் காயம் பலமாக உள்ளது இரண்டு நாட்க்கள் இங்கே ஒய்வு எடுக்க வேண்டும் என்றார் டாக்டர்..



உடனே அந்தப்பெண்னைப் பார்த்தான் பெரியகட்டுடன் முனங்கள் சத்தம் கேட்டது என்ன என்று பார்க்கும் போது அம்மா அண்ணா என்று முனங்கள் சத்ததுடன் இருந்தாள்.


விஷால் காலேஜக்கும் வீட்டிற்க்கும் போகமுடியவில்லையே என்று என்னி இந்தபெண்ணையும் விட்டுபோக மணமில்லாமல் கவலையாய் இருந்தான்.



(அந்த நேரம் கைபெசி கிடையாது)



மறுநாள் கண் விழித்தாள் அவள் அருகிள் இருந்த விஷாலய் பார்த்து மன்னிக்கவும் என்னால் உங்கலுக்கு எவ்வலவு செரமம். இந்த ஊரில் இப்படியும் ஒருத்தரா என்று ஆச்சரியத்துடன் பார்த்தாள் உங்கள் பெயர் என்ன என்று கேட்டால் என் பெயர் விஷால் என்று சொன்னான் விஷாலும் உங்கள் பெயர் என்ன என்று கேட்டான் என் பெயர் தேவிகா என்றும் சொன்னதும் அந்த நிமிடமே இரண்டுபேரும் காதல் சுவாசத்தை ஙகர்ந்தனர் அருகில் இருந்த செவிலியர் தேவிகாவைய் பார்தார் சொந்தகார பெண் அல்லவா நேற்று இரவு தேவிகா வீட்டில் காணம் என்று சொன்னார்கள் அல்லவா உடனே தேவிகா அம்மா அண்ணனிடம் சொல்லிவிட்டார் அந்த செவிலியர்....




உடனே அண்ணன்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வந்தார்கள். உள்ளே பார்த்தார்கள் விஷாலும் தேவிகாவும் மணம் விட்டு பேசிக்கொண்டிருக்கும் போது அண்ணன்கள் பார்த்து விஷாலை யார் நீ என்று கேட்டு அடித்துவிட்டார்கள் அடிக்கும் போது விஷால் பாக்கேட்டிலிருந்த பர்ஸ் தேவிகாவின் பெட்டில் விழுந்தது யாருக்கும் தெரியாமல் உடனே எடுத்துகொண்டாள் தேவிகா. விஷாலை அடித்து உதைத்து போட்டுவிட்டு தேவிகாவை அழைத்து சென்றனர் விஷால் காயங்களுடன் வீட்டுக்கு சென்றான்..




வீட்டில் போய் அம்மா அம்மா என்றான் விஷால் நீ எங்கேடா போன என்று தாய் கேட்க என்னடா காயம் என்று கதறினாள் அம்மா இது ஒன்றும் இல்லையம்மா நான் நல்லா இருக்கேன் என்று சமாதானம் ஆக்கினான். அம்மா எனக்கு பசிக்குது சாப்பாடு போடுங்கள் உடனே சாப்பிட்டு முடித்தவுடன். அம்மா அப்பா எங்கேம்மா என்று கேட்டான் அப்பா உன்னை தேடி போய்ருக்கார் என்று சொல்லியிருக்கும் போது அப்பா வந்துவிட்டார். எங்கேப்பா போன என்று கேட்டார். அதற்கு அப்பா நான் என் நண்பனுக்கு முடியல அதான் என்னால் வரமுடியலப்பா என்று சொல்லி தப்பித்தான்.





தேவிகா வீட்டில் யார் அந்த பையன் என்று கேட்க எனக்கு தெறியாது பஸ்சில் இருந்து மருத்துவமனைக்கு என்னை கொண்டுபொய் சேர்த்தார் அவளவுதான் அவர்கள் வீட்டில் நம்பவில்லை இப்படியே வாழ்க்கைய் ஒடிகொண்டிருக்க தேவிகா மனசு விஷால் எங்கே என்று தேட துவங்கியது கண்ங்கள் கசிந்தன தினமும் விஷாலை தேடி பஸ்சில் பார்த்தார் சில வருடங்களாக கிடைக்கவில்லை.



ஒரு நாள் உள்ள அவள் அலமாரியை தொரந்தாள் பர்ஸைய் தேடினாள் பர்ஸ் கிடைத்தது பர்ஸைய் திறந்து பார்த்தாள் பர்ஸில் எந்தஒரு அடையாளம் இல்லை விஷால் அப்பா அம்மா போட்டோ மட்டும் தான் இருந்தது. ஆனால் பர்ஸ் பழைய மாடலாகவும் யாரும் கண்டிராத ஒரு மாடலாகவும் இருந்தது அதைய் பொக்கிஷமாகவும் பத்திரமாகவும் வைத்திருந்தாள் தேவிகா வீட்டுக்கு ஒரே ஒரு பெண் தான் தேவிகாவுக்கு 6 அண்ணன்கள் நல்ல கோடிஸ்வர குடும்பம் ஒரு நாள் 3 வது அண்ணன் வந்து கேட்டான். யார், யார். அந்த பையன் என்று கேட்டு வற்புர்த்தினான் தேவிகா வீட்டிலும் ரோம்ப சித்திரவதை படுத்தினார்கள் அண்ணன்ங்கள் அவள் சரியாக சாபிடுவதில்லை சரியாக துங்குவதும் இல்லை. ஏன் இவள் இப்படி இருக்கா என்று தேவிகாவின் இரண்டாவது அண்ணன் தேவிகா பெட்ரூம்க்கு போனான்.



அப்போதுதான் அவன் கண்னுக்கு தென்பட்டது அந்த பர்ஸ் உடனே அந்த பர்ஸைய் திறந்து பாத்தவுடன் அதிர்ந்து போனான் உடம்பெல்லாம் வேர்த்தது காரணம் அதில் இருந்த போட்டோவில் தேவிகா அப்பாவை வியாபரம் (தொழில்) விஷயமாக கொலைய் செய்தவர் போட்டோ 19 வருடத்திற்க்கு முன் இரண்டு பேரும் வியாபாரத்தில் தகரார் ஏற்பட்டு தாஸ் குத்திகொண்டு விட்டார் உடனே தாஸைய் போலிஸ் சிறையில் அடைத்தனர்.

பலவருஷமாக கொலைய் செய்வதர்க்கு தேடிக்கொண்டிருந்த தாஸ் கிடைத்தான் என்று போட்டோ மட்டும் எடுத்து விட்டு பர்ஸை பெட்ரூமில் போட்டுவிட்டு கோபத்தில் தேவிகாவின் அண்ணன்ங்கள் தாஸைய் தேடி சென்றனர்..


விஷால் வீட்டில் இரண்டு நாட்களாக அப்பா வீடு வரவில்லை. நீ காலேஜ்க்கு போகவேண்டாம் தேடிபார்க்கலாம் என்று தேட தாயும் மகனும் ஆரம்பித்தனர் அப்பொழுது ஒருவர் வந்து சொல்லுகிறார் தனுஸ்கோடியில் ஒரு பிணம் கிடப்பதாக தெறியவந்தது அங்கு போய் பார்த்தார்கள் தனுஸ்கோடியில் தாஸ் கத்தி குத்தி கொல்லப்பட்டு கிடந்தார் மல்லிகா அழுது கடற்கறை மணலும் நனைய்ந்தது கடலும் நிரம்பியது பிறகு போலிஸ் வந்தார்கள் விசாரணை செய்வோம் யார் செய்தது கூடியசிக்கிரத்தில் கண்டுபிடிப்போம் என்று சொன்னார்கள்..



சில நாட்கள் ஆனவுடன் மல்லிகாவுக்கும் உடல்நலம் சரியில்லாமல் ஆனது விஷால் காலேஜ் போகாமல் அம்மாவைய் கவனித்து கொண்டு இருக்கிறான் ஒரு நாள் அம்மா திடிரென்று வாயில் இருந்து ரத்தம் ரத்தமா வந்தது உடனே மருத்துவமனைக்கு கொண்டுபோனான் விஷால் டாக்டர் என் அம்மாவுக்கு என்ன டாக்டர் என்று கேட்டான் உன் அம்மாவுக்கு புற்றுநோய் இருக்குப்பா ஆப்ரேஷன் பன்னனும் அதர்க்கு ஒருலட்சம் தேவைப்படும் என்று டாக்டர் சொன்னார்.
(தொடரும்)...........................