Sunday, November 25, 2012

சுவாசத்தை எளிதாக்கும் குங்குமப்பூ!

சுவாசத்தை எளிதாக்கும் குங்குமப்பூ!


தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும். குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்­ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும். குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும். அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்.

குங்குமப் பூவில் போலி நிறைய உண்டு. தேங்காய் துருவலில் வண்ணச்சாயத்தை ஏற்றி, காய வைத்து சிறிது 'saffron' essence கலந்து விற்கிறார்கள். அவை மலிவாக கிடைக்கும். தரமான குங்குமப்பூ ஒரு கிராம் விலை சுமார் ரூ. 500 இருக்கும். உண்மையான குங்குமப்பூவைத் தேர்வு செய்து வாங்கிப் பயனடையுங்கள்!


நோய் எதிர்ப்பு சக்திக்கு......

கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் 'ஏ' அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், இந்த கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.

முதுமை தோற்றத்தைக் கட்டுப்படுத்தும். கண்பார்வை கூர்மையடையும். பல் நோய்கள் வராமல் தடுக்கும். கீரையுடன் பருப்பு மட்டும் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. பல கொடிய வியாதிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங்கண்ணிக் கீரையாகும்.

உடற்சூட்டுக்கு.........     

வெந்தயம் சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. ஆனால் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ உடற் சூடு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். மோரில் வெந்தயத்தை போட்டு 10 நிமிடம் விட்டு சாப்பிட்டு வந்தால் உடற்சூடு தணிந்து விடும். ஒவ்வொரு நாளும் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தூளாக்கியோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள சர்க்கரையினளவு கட்டுப்படுத்தப்படும்.

குறிப்பாக நீரிழிவு நோயுள்ளவர்கள் வெறும் வயிற்றில் இந்த வெந்தயத்தை தண்ணீ­ரில் ஊறவைத்து காலையில் பருகி வர நல்ல மாற்றம் கிட்டும். பொதுவாக பாலூட்டும் தாய்மாருக்கு பால் நன்றாக சுரக்க வறுத்த வெந்தயத்தை இடித்துக் கொடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் வயிற்றுப் போக்கு இருப்பின் அதற்கும் வெந்தயம் சிறந்த மருந்து. பெண்களுக்கு மாதவிடாயின் போது வெந்தயம் கொடுத்தால் நன்மை பயக்கும். இவற்றோடு காய்ச்சல், சிறுநீர்ப் பிரச்சினைகளுக்கும் நிவாரணியாகக் காணப்படுகின்றது இந்த வெந்தயம். மேலும் தலைக்கு வைக்கும் எண்ணெய்க்குள் வறுத்தோ அல்லது சாதாரணமாகவோ வெந்தயத்தை போட்டுவைத்துக் கொண்டால் அது நல்ல குளிர்ச்சியைத் தரும். மொத்தத்தில் வெந்தயம் என்பது நன்மை தரும் பொருளாகக் காணப்படுகின்றது.

பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது. தலை முடி கொட்டுவதை நிறுத்த, வெந்தயத்தை தண்­ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போல அரைத்து, தலையில் தேய்த்து, அரைமணி நேரம ஊற வைத்து குளிக்க வேண்டும்.

தெரியாததை தெரிந்து கொள்வோம் 
தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்....
என்றும் அன்புடன் உங்கள் வாசிம்கான் ...........கட்டிடகலைஞன்.................

Saturday, November 24, 2012

செல்போனிலோ, வீடியோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு..


செல்போனிலோ, வீடியோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு..

''நீங்கள் செல்போனிலோ வீடியோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்... வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக
்க பரவிக்கொண்டிருக்கலாம்.


அது எப்படி...?? என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது...?'' என்று யோசிக்கிறீர்களா...?? வெயிட்...!!


உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்...(பெயர்கள் வெரும் --னுதான் இருக்கும் மாற்றப்பட்டிருக்கின்றன)

அடையாறில் வசிக்கிறார்கள்------------புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் -----வுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்த -------வுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்த போது சும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்து விட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்தும் விட்டார்கள். ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது. "செல்போனில் இருந்து டெலிட் செய்த ஒரு வீடியோ எப்படி இண்டர்நெட்டுக்குப் போகமுடியும்..? என்பது தானே உங்கள் டவுட்".

அதற்கான விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச் சம்பவங்களையும் பார்த்துவிடுவோம்.

அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் -------- துறுதுறுவென துள்ளித் திரியும் டீன் ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கிறாள். உடன் படிக்கும் மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என அப்பாவை நச்சரிக்கவே, அவரும் ஒரு காஸ்ட்லியான கேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார்.

ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, செல்போனில் தன் உடலில் துணியில்லாமல் படம் பிடித்தால் என்ன என்று தோன்றியது. உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம் துணியில்லாத தன்னுடைய அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு டெலிட் செய்துவிட்டாள். ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இதேபோல் நெல்லையைச் சேர்ந்த -----------தம்பதியரும் தங்கள் அந்தரங்கத்தை செல்போனில் வீடியோவாக எடுத்து பின்னர் அதை டெலிட் செய்து விட்டனர். ஆனால் அந்த போன் ஒரு நாள் தொலைந்து போனது. புது செல்போன் வாங்கிக் கொண்டார்கள். பழைய போனை மறந்தும் விட்டார்கள். ஆனால் பழைய செல்போனில் இருந்த அந்த தம்பதியினரின் அந்தரங்கம் இப்போது இணையதளம் முழுக்க பரவிக் கெண்டிருக்கிறது.

இதுமட்டுமல்ல, குற்றாலத்தில் குளியல் போடும் கல்லூரி மாணவிகளின் வீடியோ, ஹாஸ்டல் ரூமில் பர்த்டே பார்ட்டி கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போடும் மாணவிகளின் வீடியோ... என ஏகப்பட்ட வெரைட்டிகளில் அந்தரங்க வீடியோக்கள் இண்டர்நெட்டில் நிரம்பிக் கிடக்கின்றன.

செல்போனில் டெலிட் செய்யப்பட்ட ஒரு வீடியோ எப்படி இணையத்துக்குப் போனது என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர்.

அந்த புதிருக்கான விடையின் பெயர் "ரெக்கவரி சாஃப்ட்வேர்"(recovery software).

மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும் ஒன்று போல் ஒரு விஷயம் நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமராக்களும் ஒருநாள் பழுதடைந்தது. அவற்றைச் சரி செய்ய கடைகளில் கொடுத்திருந்தார்கள். அங்கிருந்து தான் அவர்களின் மானம் இணையதளத்தில் பறக்கவிடப்பட்டது.

இதுபோன்ற வில்லங்க சம்பவங்களின் பின்னணி என்ன...? அண்ணாநகரில் செல்போன் கடை வைத்திருக்கும் மூர்த்தி விரிவாகச் சொல்கிறார்.

"'செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விஷயமே புதுசாகத்தான் இருக்கும்.

அந்த விஷயம் தெரியாமல் தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை செல்போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள். பின்னர் டெலிட்டும் செய்துவிடுகிறார்கள். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்கு தான் பிரச்னை ஆரம்பிக்கிறது.

சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன டெலிட் செய்யப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள். இதற்காக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல "ரெக்கவரி சாஃப்ட்வேர்கள்" இருக்கின்றன. இதன் மூலம் திரும்பப் பெறப்படும் வீடியோ மற்றும் போட்டோக்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள். இந்த மாதிரியான "ஹோம் மேட் செக்ஸ் வீடியோக்கள்" எனப்படும் சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக்கி என்பதால் இந்த அயோக்கியத்தனத்தை பல கடைக்காரர்கள் துணிந்து செய்கிறார்கள் என்கிறார்.

இதைத் தவிர்க்க என்ன செய்வது...?

முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவையோ கொண்டு செல்லாதீர்கள். காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது. அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம். ஆனால்... ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகிறார்கள்.

அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் "வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள். கம்ப்யூட்டரில் அது பதிவு செய்யப்படலாம். அந்த கம்ப்யூட்டர்கள் ஒருநாள் பழுதடைந்து சரிசெய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும். ஜாக்கிரதை...!!!

ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போதும்... உலகம் முழுக்க அது பரவி விடும். அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது. அசிங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.

இப்போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேமராக்களின் வரவால் ஒவ்வொருவரும் கேமராமேனாகி விட்டார்கள். பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கேமராக்கள் வந்து விட்டன. தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள்.

உஷாராக இருங்கள்.. இந்த பதிவின் நோக்கமே பெண்களை உஷார் படுத்தத்தான்...

Wednesday, November 21, 2012

தொப்பையை குறைக்கும் அன்னாசி பழம்

தொப்பையை குறைக்கும் அன்னாசி பழம்

இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். 

அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்
பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.
அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது.

தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது. இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாச்சி பழத்தை நாமும் சாப்பிட்டு பயனடையலாமே.


தெரியாததை தெரிந்து கொள்வோம்
தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்
என்றும் அன்புடன் வாசிம்சிராஜ்..

Sunday, June 10, 2012

நீ வண்ணத்துப் பூச்சியாக மாரியது



நான் நடித்த சித்தம் அன்பு என்ற பெயரில்


நீ வண்ணத்துப் பூச்சியாக மாரியது


அன்பு எனும்


மலர்களில் தேன் இருப்பதநலதானேடி!!

என் என்னத்தில் வண்ணம் கொண்ட என் உயிரே நீ தானேடி !

நீ சுதந்திரமாய் பரப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதடி !

என் இமைக்குள் மறைந்து விடுவாய் நிழல்களைய் வந்தாயேடி!

என் எண்ணத்திள் மறைவதில்லை பல வண்ணங்களாய் நீயே தானேடி !

எத்தனையே பெண்கள் இந்நாட்டில் இருந்தாலும் என் கண்கள் பார்த்து ஆசைப்பட்டது உன்னை மட்டும் தானேடி !

என் நெஞ்சம் நேசித்தது உன் அன்பை மட்டும் தானேடி!

நான் யோசித்தது உன் நினைவை மட்டும் தானேடி !

பார்த்துக் கொண்டிருக்கும் உன் உறவுகளை விட காத்துக் கொண்டிருக்கும் உன் அத்தானுக்கு உன்னை பார்த்துக் கொள்வது எப்படி என்ற சிந்தனை தினந்தோரும் கொள்ளுதடி!

மெளனப் பார்வையிலே என் மனதை கொன்றவள் நீ தானேடி!

நீ இல்லாத நிமிடங்கள் பல வருடங்கள் என சுமையாய் சுமர்ந்து நீன்றேன்னடி!

மெளனம் எனும் கல்லெடுத்து என் மனதை உடைத்தாயேடி!


நீ இல்லாத நிமிடம் எனக்கு நித்திரை ஏனடி !

என் இனியவலே என் அத்தை பெற்று எடுத்த தவப்புதல்வியே நீ பல்லாண்டு வாழ்க என வாழ்த்தும் உன் மாமான் மகன் நான் தானேடி!


உனக்காக எத்தனை பேர் வந்தாலும் நான் தாண்டி உன் மச்சான் இதைய்தாண்டி பிரம்மன் ஏட்டில் எழுதி வச்சானடி! ...

நீ தோட்டத்திற்கு சென்றாய் பரிக்க பருத்தி, அதனால் தான் நான் வந்தேன் உன்னை துரத்தி ....

உன்னை என்னித் தவித்தேனடி இந்த இனிய இரவினிலே



உன்னை என்னியதால் இந்த இரவும் பகலாய் மாரியது என்னவளே!

சற்று என்று விழித்து விட்டேன் என் உரக்கத்தை பாதியிலே



விழித்தவுடன் தான் தெரிந்தது என் இனியவளே!

மீண்டும் உரங்கினேன் மீரியது என் மனது உன் நினைவுகளை ஏங்கி

உருண்டு படுத்தாலும் உரக்கம் ஏது என் இமைக்கு,,



என் கண்ங்கள் சொல்லுதடி என் கண்மனியே உன்னை எப்போது கான்பேன்


நீ இல்லையென்று



மல்லி மல்லி ஜாதி மல்லி ஆழ அசத்திரியே!



தினம் என்னை கில்லி கில்லி என் மனச மேலே ஒசத்தூரியே!



எனக்குள் ஒர் சந்தனக்காடு அதில் என் நந்தவனக்கிளிக்காக ஒரு அழகான கூடு!



எனக்கென சொந்தம் இல்லை என்று இருந்தவனை உன் சொர்க்கம் நான் தான் என்று என் சொப்பனத்தில் சொன்னவளே!



முல்லும் மலர்ந்ததடி உன் முகத்தைப் பார்த்தவுடன் என் முகத்தில் முகபருக்களாய் இருந்தியடி !



என் நெஞ்சம் வாடுதடி நீர் பாசனம் பார்க்காத வயல்களைப் உன்னை பார்க்காமல் இருப்பது !



நான் உனவுன்னும் வேளையிலே உன் உருவம் வாட்டுதடி நான் உனவை அருந்தவில்லை உன் உருவத்தை உனர்ந்து கொண்டேன் !



பாசிபோட்ட பருவப்பெண்னே நேசம் கொண்டு என் நெஞ்சை தொட்டாயடி!


பாசம் கொண்டு பதருதடி என் இதயம் உன்னை நினைத்து எழுதிய இரவு கடிதம் என்வளுக்காக



என்றும் உன் நினைவுடன்;-




தூக்கம் அற்ற கண்ங்கள்



தேசத்தை விட்டு வந்தவன்


வாசிம்அஸ்கர்

தொடரும் என் நினைவுகள்............................

Wednesday, January 25, 2012

புத்தகம் மனதாகிறது,,,,,வேதனைகள் பூவாகிறது,,,,,,,,.

கடல் நீரைய் கடன் வாங்கி. கடல் தாண்டி வந்தவர்கள் கடன்ங்கள் முடிந்ததா முடியவில்ளையோ! என்று அவர்களிடம் கேட்டேன். சுனாமியில் தப்பித்தவர் எத்தனை எத்தனையோ! ஆனாள் கடன்ங்களில் இருந்து தப்பிக்காதவர்களின் தவிப்புதான் என்னுள் ஊறிய எண்ணங்கள். இன்று போஸ்ட் உங்கள் வலைப்பதிவிள் வடிவமைக்கப்பட்டுள்ளேன்!.அதனால்புத்தகம் மனதாகிறது. அதன் வரிகள் உணர்வுகளாகின்றன.வேதனைகள் பூவாகிறது...




வாழ்கைக் மனிதருக்கு எப்படி. எப்படி எல்லாம் தோன்றுகிறது. ஒரு விளையாட்டாக, போராட்டமாக, வெறும் பாழாக. நிராசையும் துயரமும்மாக இன்பமாக, இன்னும் விதம் விதமாக எல்லாம், தோன்றுகிறது. அது அவரவர் மனநிலை, சூழ்நிலை, இயல்புகள் முதலியவற்றைப் பொருத்தௌ அகும். அதேபோல் தாய்நாட்டை விட்டு, குடும்பத்தை விட்டு. தொழில்தேடி வெளிநாடு வந்தவர்களுக்கு வாழ்க்கை எப்படி எல்லாம் தோன்றுகிறது.




என்ற உணர்வுகளை எழுதியிருக்கேன் (தேசம் விட்டு தேசம் வந்த பறவைகளின் துடிப்பு) என்ற தலைப்பில் என் வலைப்பதிவில் இருக்கிறது. தெறிந்து கொள்ளுங்கள். அவர்களின் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் சோகங்களையும் மனதில் மண்டிக்கிடக்கம் துயரங்களையும் சுட்டிக் காட்டியிருக்கிறேன். வெளிநாடு போவது தவறு என்று சொல்லவில்லை. இதனால் எத்தனையோ குடும்பங்கள் முன்னேறி, பலன் அடைந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். அவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து. இழப்பு என்ன? பயன் என்ன? எத்தனை மகிழ்வு! எத்தனை துக்கம்! என தராசு முனையில் அளந்து பார்க்கிறேன்! அல்லது சமுதாயத்தையோ - மற்றவர்களையோ குறை சொல்வது என் நோக்கம் அல்ல.




வெளிநாட்டில் வாழும் நம் மக்கள். ஒரு பெரிய நன்மை செய்ராங்க என்ன என்று பார்போமா? வெளிநாட்டில் சம்பாரிச்சு இந்தியாவுக்கு அனுப்புராங்க அதனால் இந்தியா பழமாக உள்ளது. அதே இந்தியாவில் உள்ள சினிமா துறையில் உள்ள அனைத்தும் மக்களும் இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று இந்தியா ரூபயை அழிக்கிறாங்க. படம் எங்கே எடுத்தாலும் அது ஒரு நல்ல கதையாக இருந்தால் அந்த படத்தை இந்தியாவிலே! எடுக்கலாம் எதர்க்கு வெளிநாடு என்று பனத்தை அழிக்கிறாங்க தேவை இல்லாமல்,! என்ன கொடுமை இது மக்களே!




இதில் எழுதப்பட்ட எண்ணங்கள் உன்மைகள் அனைத்தும் என்னை அறிய, முயன்ற முயற்சிகள் விளைவாகவே அமைத்துள்ளவை. இன்னும் எத்தனையோ கிராமங்களில் இருந்தும், ஒன்றும் அறியாத, படிக்க வேண்டிய இளைஞர்கள், வெளிநாட்டில் தள்ளப்பட்டு அவர்கள் படும் அல்லல்களையும். துன்பங்களையும் வெளிக்காட்டியிருக்கிறேன் இனி வரும் சமுதாயம் எப்படியோ!.. நம்மில் ஒரு மாற்றம் நிகழாமல். அது இந்த சமுதாயத்தில் நிகழ்ப்போவது இல்லை என்பதே!!!!!!!!!!




உன்மை! நேசத்துடன் தேசன்!!

அனைவருக்கும் எனது இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!!!!

Happy... Republic...Day 26th-January-2012

என்றும் உங்கள்,...

கட்டிடகலைஞகன்..வாசிம்அஸ்கர்

Tuesday, January 17, 2012

தேசம் விட்டு தேசம் வந்த பறவைகள் அதன் துடிப்பு.!!!!!!!!!!!




தேசம் விட்டு தேசம் வந்த பறவைகள் நாங்கள். வெளிநாட்டிள் நிலைமை தெரிகிறது. கனவில் கற்பனை செய்தது வேறு. ஆனால் இப்பொழுது பார்ப்பது வேறு. கலர்கலரான லைய்ட்டுகளும். பேரிய பேரிய கட்டிடங்களும் சாலைகளில் கார்கள் பரப்பதும். ஆனால் என்ன புகைப்படத்தில் பார்க்கும் பொழுது மனதில் ஒரு சந்தோஷம் இருந்தது. ஆனால் இப்போ நேரில் பாத்ததும் தன் வாழ்க்கையே! கேள்விக் குறியாக இருக்கு. மனதில் பயம் தோன்றுகின்றது.



நம் தேசத்தில் சந்தித்த நன்பர்களும். சொந்தங்களும் எப்படி இருக்கிறார்கள் என தெரிகிறது. அம்மா அப்பா அக்கா தம்பி அண்ணன் மாப்புள்ளா மாமா அத்தை சின்னம்மா சித்தப்பா மச்சான் அந்த சொந்தங்களை இங்கு காணவில்லை நன்பர்களை பார்க்க பைக்கு பரந்த நன்பர்கள் எங்கே! என்னை போன்ற நன்பர்கள் இங்கு படும் கஷ்டங்கள் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. அவர்கள் காட்டும் பாசம் ஏமாற்றம் அடைகிறது.


நாமும் முன்னேற வேண்டும் நம் குடும்ப உயர வேண்டும். பிறர் உதவி விவேகம் இல்லை. என்ற எண்ணம் மனதில் உருவாகிறது. உழைக்க வேண்டும். அதற்கு வேலை வேண்டும். எங்கே போய் யாரிடம் கேட்பது என்னவென்று கேட்பது! எதாவது வேலை கொடு என்றால். உனக்கு என்ன வேலை தெரியும். என்றால் என்ன பதில் சொல்லுவது போன்ற பல கேள்விகள் மனதில் பிறக்க. தன் தவறு தனக்கு புரிகிறது. இது வரை தன்னை தனிமைப்படுத்தி பார்க்கவில்லை. நமக்கு என்ன பிடிக்கும்? என்ன வேண்டும்? என்ன தெரியும்? இப்படி தன்னிலை அறியாமல் இருந்தது தவரு. படிக்கும் போது இருந்த அலட்சியம் இப்போ தெரிகிறது ஊர்சுற்றியபோது இருந்த இன்பமும். இனிமையும். கடைசி வரைவரும் என நினைத்தது தவறு. சினிமா அறைட்டையும்தான் வாழ்க்கையா இருந்தது.







இப்பொழுது அதைய் நினைத்தால் மனததுக்கு வேதனையும் கூட. இந்த உலகம் மனிதர்களை விட பணத்தை மதிக்கிறது. வசதிக்கு மண்டியிடுகிறது. பிறர் மதிக்க நாம் வாழ வேண்டும் என்றால் அந்த பணம் தேவை! வசதி தேவை. என புத்தி வேலை செய்ய. மனசு பலப்படுகிறது. மனசு பலப்பட. உடல் உழைக்கச் சொல்கிறது. எந்த வேலை குடுத்தாலும் நான் செய்கிறேன், எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் உழைக்கிறேன். எத்தனையோ கஷ்டங்கள் பட்டு, கடன்ங்கள் பட்டு, செலவு செய்தாலும். இந்த நாட்லே எல்லா கஷ்டங்கலையூம் சரி செய்யவேண்டும் என்று சந்தோஷம் துக்கம் நஷ்டம் பாசம் எல்லாத்தையும் அடைக்காக்கும் பறவைபோல் ஆய்கின்றோம்.



பலருக்கு விசா கொடுத்த இடத்தில் வேலையில்லை. வேறு இடத்தில் செய்யவேண்டும். வேறு இடத்தில் வேலை செய்தால் இந்தநாட்டின் சட்ட விரோதமான குற்றம் அதர்க்கு பெயர்தால் ஹிந்தில கள்ளிவேள்ளினு சொல்லுவாங்க! இப்படி பட்ட சூழ்நிலையாகிறது. பலருக்கு விசா கொடுத்த இடத்தில் வேலையில்லை. வேறு இடத்தில் செய்ய வேண்டும். வேறு இடத்தில் வேலை செய்தால் இந்தநாட்டின் சட்ட விரோதமான குற்றம். இருந்தும் சூழ்நிலை நம்மை விடுவதில்லை. இந்த நாட்டின் அதிகாரிகள் கண்ணில் படாமல் என்னேரமும் எதுவும் நிகழலாம் என நினைத்து வேலை செய்ய வேண்டும். யாரை பார்த்தாலும் இவர் சிஜ்டி யா இருப்பாரோ? ஒரு கம்பெனியில் வேலை செய்வதுக்காக இந்தநாட்டின் ஒரு கார்டு குடுப்பாங்க அந்த கார்டுக்கு பெயர்தான் (பத்தாக்கா) என்று பெயர். வேலை பார்க்கும் போது வேறுயாராவது வந்தால் இவர் அதிகாரியா இருப்பரோ என்று பயத்துடன் வேலை செய்யவேண்டும்.






இப்பொழுது புதிதாக வரும் பலபோருக்கு வேலையின்மை, சம்பளம் குறவு போன்ற பிறச்சனைகள் வர இது போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அது இந்தநாட்டிக்கு வந்த பிறகே தெரிகிறது. இப்படி பல கஷ்டங்களுடன் வாழ்க்கை ஆரம்பமாகிறது. சுமார் 8 இல்லை என்றால் 10 தங்கிருக்கும் ரூம் தருவாங்க அதில் எல்லா மொழி காரர்கலும் இருப்பாங்க அவர்களுடன் நயந்து போக வேண்டும். தன் உடமை என் படுக்கையை தவிர வேறு எதுவும் வைக்க முடியாத நிலைமை. வேலை நேரம் போக மீதி நேரம் இந்த அறைதான். உன் ஒய்வு. உன் பொழுது போக்கு உழைப்பு உணவு உறக்கம் இனி இதுவே உன் உலகம். இதைத்தவிர வேறு எந்த சுகமும் இல்லை. ஒரு நாள் செய்ததே! திரும்ப திரும்ப காலம் முழுவதும் செய்ய வேண்டும். சக்கரம் போல் அமைய அதில் நீ இயந்திர மனிதனாக வேலை செய்ய வேண்டும்.






இனி உன் வீட்டில் நடக்கும் சம்பவங்களக்கும் உனக்கும் எந்த சம்மதம் இல்லை காரியங்களுக்கு பங்கேற்க முடியாது. அவசரத்துக்கு கூட உதவமுடியாத கொடுமை நான் இருக்கிறேன் நீ கவலைப்படதே! என ஆறுதல் சொல்ல முடியாத நிலமை சம்பவங்கலை நேரில் பார்க்க முடியாது போன் முலியமா தான் பேசமுடியும். எப்பவது யாராவது வந்தால் அவுங்களிடம் DVD குடுத்துவிடுவாங்க. அப்போ பார்த்து சந்தோஷம் படுவதுதான் வாழ்க்கையா இருக்கும். இப்படி வருடம் வருடமாக வயசு போக ஒருமாதம் இருண்டுமாதம் என கணக்கு போட்டு தாய் நாடுசென்று திரும்ப இந்த துயரமும் வேதனையும் நிரந்தரமாகிறது. பிரிவு காலம் பூராவும் தொடர்கிறது. இதனால் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் போக வெறுமையே மிஞ்சுகிறது. மாதம் மாதம் குடும்த்துக்கு பணம் அனுப்பி வைத்தாலே கடமையாகிறது. ஆயிரம் இருந்தும் நம் குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் மட்டும் புத்தியில் அழமாகப் பதிகிறது.





நம் தேசத்தில் உள்ள பொருளாதாத்துக்கு இத்தனை விரைவில் முன்னேறுவது சிரமமே! என்றாலும் இதுவே நீடிக்கக் கூடாது. காலங்காலமாக தொடரக் கூடாது. பிரிவே வாழ்க்கையாக கூடாது. இந்த வட்டத்தை விட்டு மாற வேண்டும். நீ செய்த தவறு உன்னைத் தின்னக் கூடாது. என்ன செய்வது என் சூழ்நிலை இப்படி ஆகிவிட்டது. என் விதி என வெந்து கொண்டு இருப்பதில் ஒரு காரியமும் நிறைவேறுவதில்லை. தைரியம் வருவதில்லை. யோசி. நல்லா யோசி. சாப்பிடும் போதும் தூங்கும் போதும். காலையில் எழும்போது. யோசி இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி சூழ்நிலைக் கைதியா இருக்க வேண்டும் என்று யோசி. மனசில தைரியம் வர்ர வரைக்கும் யோசி. தைரியம் என்பது உடம்பில் இல்லை மனசில இருக்கு மனசில் தைரியம் வரவேண்டும் என்றால் புத்தி தெளிய வேண்டும் என்றால் தன்னைத்தானே அறிதல் வேண்டும் அதற்க்கு தனக்குதானே யோசிக்க வேண்டும் புத்தி தெளிந்த மனசில தைரியம் வர்ர வரைக்கும் யோசிக்க வேண்டும். வேதனைகள் காரிய கஷ்டங்கள் அவமானங்கள் இடையூருகள் இவற்றைத் தாங்கும் மனோபாவம் வேண்டும் அப்பொழுதுதான் இது போன்ற சூழ்நிலைகளை உடைத்துக் கொண்டு வெற்றி கான முடியும்.


இங்கே ஒன்னு சொல்ல ஆசைப்படுகிறேன். நீ ஒரு முடிவு எடு அதுதான் உன் வருங்காலத்தை மாற்றும். இந்த நாட்டில் வேலை பார்ப்பதுக்கு பதிலா? ஊர்ல ஒரு 4 மாடு வாங்கி அதை காட்டு பகுதில் மேய விட்டால் அது நல்லா மேய்யும். அது தரும் பால் அதை விற்றால் குட நிம்மதியா இருந்துராலாம். அதான் ஊர்ல அரசாங்கமே... 2 மாடு மிக்ஸி கிரேண்டர் லாப்டப் எல்லாம் குடுக்குராங்கலாம். காலையில இந்துருச்சு கிரேண்டர்ல அரிசி ஆட்டி தோசை இட்லி இந்த மாதிரி சுட்டு முடிந்தவுடன் மிக்ஸில சட்டினி அரச்சு சாப்பிட்டு முடிந்தவுடன் 2 மாடுகளையும் பத்திகொண்டு காட்டுல விட்டுட்டு லாப்டப் எடுத்து. நல்லா நாலு பேரிடம் கடைலைய போட்டுட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்து பால் பீச்சி வித்துட்டு நல்ல நிம்மதியா இருந்துராலாம்....