Thursday, September 30, 2010

எந்திரன் படம் குறித்து வந்திருக்கும் 'முதல் தகவல் அறிக்கை






30.09.2010 இன்று






சூப்பர் ஸ்டார் ரஜினியை இதற்க்கு முன்பு இப்படியொரு பிரமாத கெட்டப்பில் பார்த்ததில்லை..
எக்ஸலெண்ட் நடிப்பு பிரமாதமான ஸ்டண்ட் ஜஸ் அழகு சொக்க வைக்கிறது இயல்பான காமெடி மிரள வைக்கும் இரண்டாம் பாகம்.. குடும்த்தோடு பார்க்க மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படம்.


எந்திரன் படம் குறித்து வந்திருக்கும் முதல் தகவல் அறிக்கை இது என்றால் மிகையல்ல துபாயில் இன்று காலை முதல் காட்சி 7.30 மணிக்கு திரையிடப்பட்டது இந்தக் காட்சிக்காக ஒரு மணிநேரம் முன்பாகவே காத்திருந்தனர் ரசிகர்கள் அவர்களில் துபாயில் மார்க்கெட்டிங் அதிகாரியாகப் பணியற்றும் வருனும் ஒருவர்.

படம் பார்த்தையும் முடிந்தபிறகு ரசிகர்கள் மனநிலையையும் அவர் நம்மிடம் தொலைபேசி மூலம் இப்படிக் கூறினார்.
சான்ஸே இல்லை சார் படம்னா இதான் இதுக்கு மேல ஒரு ஹைடெக் கமர்ஷியல் படத்தை இனி இந்தியாவில் யாராலும் தர முடியுமா தெரியவில்லை ரஜினி ஷங்கர் காம்பினேஷன் அட்டகாசம் இரண்டே முக்கால் மணி நேரப் படம் எப்போது இடைவேளை. வந்தது என்றே தெரியவில்லை..
அதன் பிறகு ஒன்றரை மணி நேரப் போன வேகம் பிரமிக்க வைக்கிறது எந்திரனில் கிராபிக்ஸ் காட்சி எது என்று கண்டுபிடித்தால் ஒரு கோடி பரிசு என்று போட்டியே வைக்கலாம் அந்த அளவு மிரட்டல் அசத்தல் ஸ்டாவிஸ்டன் ஸ்டுடியோ மற்றும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் செய்த ஹாலிவுட் நிறுவனத்தினர் கலக்கி இருக்கிறார்கள்.
குடும்பத்துடன் அச்சமின்றிப் பார்க்கலாம் என உத்தரவாதமே தரலாம் படம் அத்தனை டீஸண்டாக உள்ளது.

படத்தின் பாடல்களுக்காவே தனியாக இன்னொரு முறை பார்க்க வேண்டும் குறிப்பாக கிளிமாஞ்சாரே கலக்கல் என்றார் அவர்.

அமெரிக்கா பிரிட்டன் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் இன்றே எந்திரன் சிறப்பு காட்சிகள் நடக்கின்றன அந்த திரையரங்குகள் இப்போதே திருவிழாக் கோலம் பூண்டுள்ளதாக ரசிகர்கள் தொலைபேசி மூலம் தெரிவித்தனர்..